இலங்கையில் 936 பேருக்கு ஒட்சிசனின் உதவியுடன் 936 பேருக்கு சிகிச்சை

ஒட்சிசனின் உதவியுடன் 936 தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கொவிட் 19 இன் பரவலைத் தடுப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீண்ட நாள்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட 4,347 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த அநேகமான தொற்றாளர்கள் நீண்டநாள்பட்ட நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை