ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர்- பையோடெக் தடுப்பூசிகளை, ஐக்கிய அமெரிக்கா இன்று (28) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ்
இந்தப் பெருந்தொற்று தொடர்கின்றது மற்றும் புதிய திரிபுகள் வெளிப்படுகின்றன என்றவகையில், முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு முடிந்தளவு விரைவாக தடுப்பூசி ஏற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது முக்கியமாகும்.
அமெரிக்காவின் உணவு மற்றும் ஒளடத நிர்வகத்தினால் அனுமதிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகள் இந்த நன்கொடையானது இலவசமாகக் கிடைப்பதுடன் இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிபாட்டையும் பிரதிநிதித்துவப்பத்துகிறது.
ஜூலை மாதம் 16 ஆம் திகதி அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையளிக்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசி மருந்தளவுகளுக்கு மேலதிகமாகவே தற்போது இந்த தடுப்பூசி விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
200 செயற்கை சுவாசக்கருவிகள் உட்பட 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அவசர பொருள் விநியோகங்கள் மற்றும் முக்கியமான சேவைகளை வழங்கி, இந்த பெருந்தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்தே அமெரிக்கா இலங்கை சுகாதார அமைச்சுடன் பங்காண்மையுடன் செயற்பட்டு வருகின்றது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மக்களின் அவசர சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் இந்த பெருந்தொற்றின் எதிர்மறை பொருளாதார தாக்கங்களை தணிப்பதற்கும் இந்த உதவிகளானது இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 9 மாகாணங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன.