யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 09 மாதக் குழந்தை உட்பட 97 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 09 மாத ஆண் குழந்தை ஒன்று உட்பட யாழ். மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 31 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
சங்கான பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 49 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், மயிலிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.