மாணவனின் கண் சத்திர சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கல்

மட்டக்களப்பு மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 7 கல்வி பயிலும் மாணவனின் கண் சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி இன்று (20)வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் வசிக்கும் செல்வராசா சோபேஸ் நாத் என்ற 12 வயது மாணவனின் இரண்டு கண்களும் பழுதடைந்துள்ளன.

இந்நிலையில் மாணவனின் கண் சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய முன்னாள் சிறுவர் பாதுகாப்பு மாவட்ட இணைப்பாலரும் தற்போது அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் எ .கோடிஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் 300600.00 ரூபாவினை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றும் வி .முரளிதரன் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் ஆகியோரினால் குறித்த நிதி இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .
புதியது பழையவை