கொவிட் நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசனுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்


இலங்கையில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஒட்சிசனை கொண்டு வருவதற்காக இந்தியா சென்ற கடற்படைக் கப்பல், ஒட்சிசனுடன் நாடு திரும்பியுள்ளது.

இலங்கைக்கு தேவையான ஒட்சிசனை, இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கைக்கு தேவையான ஒட்சிசனை கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பலான சக்தியில், நாற்பது தொன் திரவ மருத்துவ ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது. சென்னை துறைகத்தில் இந்தப் பணிகள் இடம்பெற்றன.

இதற்கமைய, இன்று (20)காலை சென்னை துறைமுகத்தில் இருந்து குறித்த கப்பல் இலங்கை திரும்பிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஒட்சிசனை கொண்டு வருவதற்காக கடந்த 17ஆம் திகதி, இந்த கப்பல் சென்னைக்கு புறப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்திய கடற்படை கப்பல் ஒன்றும் நேற்று மாலை மருத்துவ ஒக்சிசனுடன் இந்தியா – விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை புறப்பட்டுள்ளதாகவும், இரண்டு கப்பல்களும் 22 மாலை மற்றும் 23 ஆம் திகதி காலை கொழும்பை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதால் அதனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை