மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வீடுகளில் கொரோனா தொற்றினால் மரணமடையும் உடல்களை அடக்கம் செய்வதில் பல சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் மரணமடையும் உடல்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம் எனவும் அதனால் குடும்ப உறவினர்கள் உடல்களை வைத்து அடைக்கப்படும் பெட்டிகளை பாதுகாப்பு உடைகள் இன்றி சுகாதார ஊழியர்களுடன் இணைந்து தூக்கி ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் மரணடையும் உடல்களை வைக்கும் பிரேத அறையின் முன்னால் அதிகமான உறவினர்கள் பாதுகாப்பு அங்கிகள் இன்றி கூட்டமாக நின்று பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும் அறிய முடிந்துள்ளது.
எனவே இவ்விடயம் சம்மந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.