நாட்டில் நிலவும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்
அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரம் கலந்து கொள்ள முடியும்
என இராணுவ தளபதி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும், மரண நிகழ்வில் 25 பேர் பங்கேற்க அனுமதி எனவும் தேவையான ஊழியர்களை அழைப்பதை திணைக்கள தலைவர் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.