இலங்கையில் ஒரே நாளில் அதிகரித்த கொவிட் பலி


இலங்கையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நேற்றையதினம் (13) கொவிட் தொற்றினால் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் ஆண்கள் 87 பேரும் பெண்கள் 73 பேரும் அடங்குகின்றனர்.

இதன்மூலம் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,935ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை