மட்டக்களப்பு பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 81 மில்லி மீட்டர் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் சர்வோதய வீதி பகுதியை சேர்ந்த பிலிப் ஜுட் என்பவருடைய விவசாய காணியை துப்பரவு செய்யும் போது துருப்பிடித்த நிலையில் 81 மில்லி மீட்டர் மோட்டார் குண்டு ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார் .

குறித்த மோட்டார் குண்டு தொடர்பாக தகவல் அறிந்த குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீட்கப்பட்ட 81 மில்லி மீட்டர் மோட்டார் குண்டு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை