நேற்று 3 ஆயிரத்து 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 45 ஆயிரத்து 118 ஆக எகிறியுள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 563 பேர் நேற்று(12) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.