மட்டக்களப்பில் மாயமான சிறுமி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையிலேயே 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது அம்மம்மா முறைப்பாடு பதிவு செய்துள்ளளார்.

புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சோந்த 16 வயதுடைய சிறுமியான தவராசா சசீக்கா என்பவரே காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தையார் இல்லாத நிலையில் தாயார் வேறு திருமணம் செய்து சென்றுள்ளதால் குறித்த சிறுமியும் அவரது அக்காவும் அவர்களுடைய அம்மம்மா பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை