சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கொரோனா

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை