பொலிசார் , சுகாதாரப் பிரிவினரின் தடைகளைத் தாண்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் நகரில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.
24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு
கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி
இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்குஆகிய கோரிக்கைகளை முன்வைத்து
இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ்நகரில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ் நகர வீதி வழியாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்து குறித்த வாகன பேரணி நிறைவுபெற்றது
வாகன பேரணியானது ஆரம்பமாகியாழ் நகரை வந்தடைந்த போது பொலீசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பேரணியினை தற்போதுள்ள அதிகரித்த கொரோனா தொற்று நிலைமையில் நடாத்த முடியாது என தடுத்து நிறுத்த முட்பட்டனர்.
வாகன பேரணி யில் சென்றோர் தாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடை வெளி பேணி தொடர்ந்து செல்வதாக தெரிவித்து பொலிசாரின் தடையை மீறி
குறித்த வாகன பேரணி தொடர்ந்தது. 500க்கும் மேற்பட்ட வட மாகாணத்தை சேர்ந்த அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர.