செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிய கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சில வகுப்புகளை மாத்திரம் பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அத்தோடு, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுள்ளது.
இதேவேளை, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.