மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு கிராமத்தைச்சேர்ந்த இளம் சிறுமி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (13)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில்லிக்குடியாறு கிராமத்தைச்சேர்நத 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியின் தாயார் மரணமடைந்திருந்ததாகவும், தனது தாயை இழந்த யுவதி தானும் தற்கொலை செய்யப்போவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அவர் தனது வீட்டு அறையினுள் களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.