கிளிநொச்சியில் பிரதேச சபை ஊழியர் இன்று (13) திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்கு செல்வதாகப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.