திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று 16-08-2021 அதிகாலை 1 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளன.
இதன்போது, நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.