மட்டக்களப்பில் வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (20) மாலை 5.30 மணி அளவில் மட்டக்களப்பு வாழைச்சேனை பாசிக்குடா வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது,
அதிவேகத்தில் வந்த தனியார் கார் ஒன்று தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பசுமாடுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.