இலங்கையில் மக்களின் கவனத்தை ஈர்த்த யானை - இரண்டு குட்டிகளை பிரசவித்த அதிசயம்

கேகாலை - பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள யானையொன்று, இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

சுரங்கி என்ற யானையே, இவ்வாறு இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யானை தனது முதலாவது குட்டியை இன்று (31)அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது.

பிறந்த இரண்டு குட்டிகளும் ஆண் குட்டிகள் என அறிய முடிகின்றது.

புதியது பழையவை