கொவிட்-19 பரவல் காரணமாக அரச நிறுவனங்களுக்கு சேவையாளர்களை அழைக்கும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
இது தொடர்பான சுற்றுநிருபம் கடந்த 6 ஆம் திகதி அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியினால் மாகாண பிரதம செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள், ஆகக்குறைந்தது வாரம் ஒன்றில் 3 நாட்கள் சேவைக்கு சமுகமளிக்கும் வகையில் குழுவொன்றை நியமித்து அக்குழுவினால் தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.