நாட்டின் தற்போதைய நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(09) ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் தற்போதைய நிலையில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாவிட்டால் கொரோனா தொற்றை எம்மால் கட்டப்படுத்த முடியாது. நாளை முதல் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் பட்சத்தில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தொற்றுபரவல் கட்டப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். எனவே நாட்டின் தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும்.