மட்டக்களப்பு கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 21 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் மிதுன் ராஜ் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் , தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நோய் தொற்றாளர்களுடன் தொடர்பு பட்டவர்கள் என 62 நபர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே .கிரிசுதன் வழிகாட்டலின் கீழ் கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் மிதுன் ராஜ் தலைமையில் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாக பி சி ஆர் , மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.