கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் யாழ் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (06) முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.