மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 199கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.