யாழ் பருத்தித்துறை வீதியில் ஆரியகுளம் சந்திக்கு அண்மையாக உள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று (03) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கு வசிக்கும் பெண் ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீட்டிக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.