காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேரை நேற்று வியாழக்கிழமை (02) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காத்தான்குடி பகுதிகளில் உள்ள வீடு ஒன்றினை முற்றுகையிட்டபோது அதில் 6 பேரை ஒரு கிராம் 10 மில்லிக்கிராம்  ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை இன்று (03) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை தொடர்ச்சியாக நாளாந்தம் போதைப்பொருளுடன்  2 பேருக்கு மேற்பட்டோரை காவற்துறையினர்  கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை