அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய கூடுதல் விலைக்கு பொருட்களை விற்போர் தொடர்பில் முதலாவது முறைப்பாடு கிடைக்கப் பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கும், இரண்டாவது முறைப்பாடு கிடைக்கப் பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 20 இலட்சம் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை