வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே நேற்று(08) யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கோப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.