ஐ.நா விவகாரத்தில் கூட்டமைப்புக்குள் நடந்தது என்ன?


தமிழர் தரப்பிலிருந்து ஐ.நாவிற்கு நாங்கள் அனுப்புகின்ற கடிதமானது கடந்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட தமிழின எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக எழுதப்பட்ட வரைபாகவே கருதப்படுகின்றது என டெலோ அமைப்பின் உத்தியோகபூர்வ ஊடகப்பேச்சாளரும்,சர்வதேச தொடர்பாளருமான சுரேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46/1 தர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் மாதக் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவர்களின் வாய்மூல அறிக்கை வெளியாக இருக்கின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
  
இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் திரு. சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் திரு.செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் திரு. என். சிறீகாந்தா ஆகியோரினால் தமிழீழத்தின் தற்போதைய நிலை குறித்துக் காட்டமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்கள்.

மேலும், 2009இல் - முள்ளிவாய்க்கால் போரில் சிறிலங்காவின் படைகளும் - விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே' என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக் கொண்டு மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை