பாம்பு விஷத்தில் இருந்து கோவிட் தொற்றுக்கு மருந்தா?

பாம்பு விஷத்திலிருந்து கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

 சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பு வி‌ஷத்தில் இருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக மருந்தை உருவாக்கும் முயற்சியில் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு செல்களில் கோவிட் வைரஸ் இனப்பெருக்கம் செய்வதை கட்டுப்படுத்துகின்றது என்பது தெரிய வந்துள்ளது.

பாம்பு வி‌ஷத்தின் இந்த மூலக்கூறு கொரோனா வைரசில் இருந்து மிக முக்கியமான புரதத்தை தடுக்கிறது என்று சாவ்பாலோ பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வின் ஆராய்ச்சியாளருமான ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்கட்ட ஆய்வுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீட்டு செய்கிறார்கள் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை