மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு எடுக்கப்படும் காலத்தினை குறைப்பதற்கான சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு குறித்த சுற்றறிக்கையினை அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் ஏற்படும் தாமதம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்த கோரிக்கையினை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.