பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்கள் கைது

பாலியல் தொழில் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் 23, 29 வயதான பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டவர்கள் எனவும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை