சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை முறையான மேற்பார்வை இல்லாது இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்ததான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களான ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை்கு வருகை தந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்களின் தனிமைப்படுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் முறையாக மேற்பார்வை செய்யததால் இது மிகவும் ஆபத்தான நிலை என அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை