தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்தரமுல்ல பிரதேசத்தில், விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், ஆறு பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபசார விடுதியை நடத்திச்சென்றவர்கள், நடத்திச் சென்றவர்களுக்கு உதவியர்கள் உள்ளடங்களாக ஏழு ஆண்களும் 6 பெண்களுமே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 810 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மொரட்டுவை, தலவத்துகொட, பிபிலை, ராகம, அம்பலந்தொட்ட, மொரகஹத்துடுவ, பிலியந்தலை மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 – 49 வயதுடைய பெண்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையவே குறித்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.