மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுள்ள எதிர் கட்சியினர்- கடுமையாக சாடும் பிரசாந்தன்

இலங்கையில் எதிர்க்கட்சியினர் மிக மிக மோசமான கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த ஆட்சியை எவ்வாறு கைப்பற்றலாம் என்ற முயற்சியில் தான் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட் சியின் பொது செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.   

இன்று கட்சி அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்தகால மகா போகங்களின் போது எதிர் கட் சியினர் விவசாயிகளையும் ஒன்றிணைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். இவர்களால் ஊடகங்களுக்கு முன்நின்று அறிக்கைகளை மாத்திரம் தான் விடமுடியும். அதேநேரத்தில் எமது கட்சித் தலைவர் கூறியிருந்தார் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாரிய நெல் உற்பத்தி ஏற்படும் என்று அதேபோன்று இம்முறை விளைச்சல் அதிகரித்திருக்கின்றது.

உண்மையிலேயே எதிர்க்கட்சியினர் செய்த போலிப் பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்யாக மாறி இருக்கின்றது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இவற்றில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் அரசாங்கம் கொண்டு வருகின்ற எல்லாத் திட்டங்களையும் எதிர்க்கின்ற, அவர்கள் அல்ல எதிர்க்கட்சியினர்.
திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசு முனைந்திருந்தது ஆகவே அதன் அடிப்படையில் பாரிய விளைச்சலை இம்முறை காணக்கூடியதாக இருக்கின்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையில் தங்களுடைய வங்குரோத்து அரசியலை எதிர் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆகவே இதில் அரசியல் ஈடுபாடு கட்சி பேதமின்றி மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
ஆகவே இதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.

 காணாமல்போனோர் விடயம் தொடர்பாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தினரும் தெளிவாக இருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியும் நல்லாட்சியினை கொண்டு வரும்போது மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனோடு இணைந்த கட்சிகளும் காணாமல் ஆக்கப்பட்டோர் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம் என்று கூறி அந்த ஆட்சியினை அமைத்தார்கள்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து இந்த அரசாங்கத்தை பாதுகாத்தது இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து தான் நல்லாட்சி அரசினை நடத்தினார்கள். ஆனால் அவர்களது காலத்திலும் எந்த விதமான தீர்வுகளும் எடுத்துக் கொடுக்காமல் மக்களை நடுத்தெருவில் விட்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
நல்லாட்சி காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் கையை ஆட்டிக்கொண்டு தற்போது ஆட்சி மாறிய பின் அதே கோஷத்தை எடுத்துக்கொண்டு தற்போது வருகின்றார்கள். நல்லாட்சி அரசாங்கம் மக்களை ஏமாற்றி இருக்கின்றது . மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஒரு அரசாங்கம் வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் அவர்களோடு சேர்ந்து பாடுபட்டது.
நிச்சயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும் தமிழர்களின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக சிவனேசதுரை சந்திரகாந்தன் அரசாங்கத்துடன் பேசி கொண்டிருக்கின்றார் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான அடிப்படை பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை