தென் பகுதி சர்வதேச கடற்பரப்பில் பாரியளவு ஹெரோயின் போதைப் பொருளுடன் வௌிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கை நடவடிக்கையின் போது மீன்பிடி கப்பலொன்றில் பயணித்த குறித்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்
பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாரிய பாதுகாப்புநடவடிக்கைகளுடன் சந்கே நபர்கள் மற்றும் அவர்கள் பயணித்த மீன்பிடிகப்பல் ஆகியன கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இந்திக்க டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கை நிமித்தம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.