மட்டக்களப்பு கடலில் நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் கடலில் நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் தைக்கா வீதியை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை