மட்டக்களப்பு கடல் பகுதியில் 155 கிலோ ஹெரோயின் மீட்பு

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 155 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த 7 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய ஈரான் இலங்கை கடல் பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் (11) மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு  கடற்படையுடன் இணைந்து கைது செய்துள்ளதாகவும் இவர்களுடன் 4 தினங்களில் கரையை வந்தடைவார்கள் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் ஜ.என்.கருணாரட்ன மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க ஆகியோரின் மேற்பார்வையில்,இந்த விசேட நடவடிக்கை  கடற்படையுடன் இணைந்து இலங்கை ஈரான் கடல் பரப்பில் இரவு பகலாக ஹரோயின் போதைப் பொருள் கடத்தல் காரரை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த படகு மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய இலங்கை ஈரான் கடலில் வைத்து மடக்கி பிடித்தபோது படகில் இருந்து 155 கிலோக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் 7 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கடலில் இருந்து கொழும்பு கடற்படை முகாமிற்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 4 தினங்களில் கரையை வந்தடைவார்கள் என எதிர்பாப்பதாக அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை