மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று (20)அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.