மட்டக்களப்பு - ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணகியன் ராசமாணிக்கம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

