பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதஜயசுந்தரவுக்கு எதிராக சாட்சியமளிக்கும் வகையிலே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.