எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.