இந்துகாதேவிக்கு தேசத்தின் வீர மங்கை எனும் விருதை இலங்கை முதலுதவிச் சங்கம் வழங்கி கௌரவிப்பு


இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சிவகுரு ஆதீன குருமுதல்வரும், இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை ஆலோசகருமான தவத்திரு வேலன் சுவாமிகள் முன்னிலையில், பாடசாலை அதிபர் க.தெய்வராசா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டில் தங்கம் வென்ற வீராங்கனை இந்துகாதேவிக்கு தேசத்தின் வீர மங்கை எனும் விருதை இலங்கை முதலுதவிச் சங்கம் வழங்கி கௌரவித்தது.

நிகழ்வில் இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ், தேசிய கண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ், மகளிர் பிரிவுப் பொறுப்பாசிரியர் ச.கேதீஸ்வரி, பாடசாலை இந்துமாமன்ற பொறுப்பாசிரியர் இ.சங்கரன், ஆசிரியர்கள், மாணவர்கள், இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

புதியது பழையவை