மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்


சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள்
இராஜாங்க அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு அமைய நாடளாவிய ரீதியில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றினை துரிதமாக இல்லாதொழிக்கும் நோக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று அனைத்து அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனைத்து அலுவலக பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
புதியது பழையவை