தாய் செலுத்திய முச்சக்கர வண்டி-குழந்தை பலி

முச்சக்கரவண்டி ஒன்று பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.

முச்சக்கர வண்டியை குழந்தையின் தாயே செலுத்தியதாகவும் அவருக்குச் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த குறித்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு ஆண் ஆகியோர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை