மட்டக்களப்பில்-கொடூரமாக கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு பகுதியில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியான அரசடியில் வைத்து கொடூரமாக கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலை சம்பவத்தில் கொலையாளிகளை கையும் களவுமாக பிடித்த நபர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் கணவரிடம் காவல்துறையினர் சில அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளதாகவும் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஊடகங்களுக்கு படுகொலை செய்யப்பட்டவரின் கணவர் தெரிவிக்கையில்,
தனது மனைவியின் கொலைக்கான நீதியினை கடவுளும் நீதிமன்றமும் வழங்கும் என நான் நம்புகின்றேன். 

எனது மனைவியின் இழப்பை என்னால் எவ்வாறு விவரிப்பது என்று முடியாமலிருக்கின்றது.
இன்று 16 நாட்கள் கடந்தும் நாங்கள் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றோம். இதற்கான நீதியினை நீதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும் இதே போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் இனி ஒருபோதும் இடம்பெற இடமளிக்கக்கூடாது.

ஊடகங்களும் இந்த செய்தியினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றீர்கள். இனி எனது மனைவி உயிரோடு வரப்போவதில்லை ஆகவே எனது மனைவியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை