நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி தொழிற்சாலையின் உற்பத்தி செயல்முறை மற்றும் அதன் தரநிலையை கண்காணித்தார்.
தொழிற்சாலையை பார்வையிட்ட ஜனாதிபதி, திரவ பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.




