அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அரசியலமைப்பை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் ஜூன் 29 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.
இதன்படி, அரசியலமைப்பு பேரவையின் அமைப்பில் மாற்றங்கள், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரச பதவிகளில் இருப்பதைக் கட்டுப்படுத்துதல், அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறை உள்ளிட்டவை முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த வரைவு இப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கலந்துரையாடல்களை நடத்தினார்.
சுயாதீன அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.