களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பெரியகல்லாறு பகுதியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சா.இராஜேந்திராவின் வழிகாட்டலின் கீழ், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரனின் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

டெங்கு நோயை ஒழிப்பதற்கான அறிவுறுத்தல்கள்
இதன்போது நுளம்பு பெருகும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

நுளம்பு பெருகும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்தோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவற்றினை தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக டெங்கு தாக்கம் தொடர்பான அறிவுறுத்தல்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை