தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் இன்று(26) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து காரணமாக வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெருமளவான மருந்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீ விபத்துக்கு மின்சார கோளாறே காரணம் என அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தீ பரவலை அவதானித்த இராணுவ வீரர் ஒருவர் விரைந்து செயற்பட்டு மேலும் ஏற்படவிருந்த அழிவினை தடுத்து நிறுத்தியுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதியது பழையவை